ஆமாம் , ஆமாம் பைத்தியக்கார உலகத்துல தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். எல்லாரும் ஏதாவது ஒன்னு மேல பைத்தியமா பித்து புடிச்சி தான் திரிஞ்சிக்கிட்டு இருக்கோம். இதுல ஆண் பெண் அப்படிங்கிற பாரபட்சமே கிடையாது. எல்லாமே பித்துபிடிச்சு தான் திரியுரோம்.சரி எத்தனை வகையான பித்து இருக்குனு ஒரு சின்ன அலசல்..... காதல் பித்து மொபைல் பித்து பொன் பித்து பெண் பித்து ஷாப்பிங் பித்து(ஆன் லைனும் அடக்கம்) மண் பித்து பைக் பித்து சாப்பாடு பித்து பேஷன் பித்து பால் பித்து . டீ பித்து காபி பித்து இசை பித்து . கவிதை பித்து ஸ்நாக்சு பித்து ஆன்மீக பித்து . அரசியல் பித்து கம்ப்யூட்டர் பித்து சினிமா பித்து கலர் பித்து புத்தக பித்து ஸ்ஸ் அப்பப்பா யோசிக்க யோசிக்க லிஸ்ட் பெருசாகிட்டே போது ..இத்தோட முடிச்சுக்குவோம...
எல்லா வருடமும் குறிப்பிட்டுச் சொல்ல சில சாதனைகளோ, துன்பியல் நிகழ்வுகளோ ஏதாவது ஒன்றாவது மெமரி குடோனில் இருக்கும். ஆனால், இந்த 2023−ஆம் ஆண்டுதான் எந்தவித பேரின்பமும், பெருந்துன்பமும் தராமல் தன்னளவில் வந்தான் போனான் வகையறாவாகவே அமைந்தது. பொட்டிப்படுக்கையை மிகக்குறைவாகவே கையில் சுருட்டிக்கொண்டு பயணம் கிளம்பியிருக்கிறேன். ஜி அளவுக்கு பயணமெல்லாம் நமக்கு ஆண்டுதோறும் அமைந்ததில்லை,அமைவதுமில்லை,அமையப்போவதும் இல்லை. 2023−ல் செய்த முக்கியப் பயணமென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக குவைத் சென்று வந்தது மட்டும் தான் தேறும். அதுவும் வேலை நிமித்தமாகத்தான். இருந்தாலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு குறைந்தபட்சம் குவைத்தைச் சுற்றிப்பார்க்க முடிந்தது பேராச்சரியம். பஞ்சதந்திரம் கமல் கேங் போல நல்ல நண்பர் வட்டம் அமைந்தது. நிமிடந்தோரும் சிரிப்புமழை. வாயைத் திறந்தாலே, மூடிட்டு இருடா ல** என பங்கமாய் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். கூட்டாகச் செய்த பெயர் சூட்டும் சம்பவங்கள் தான் மிகக்கொடூரம். நூடுல்சிற்கு மண்புழு என்று பெயர் வைத்ததாகட்டும், தலைக்கவசத்திற்கு மண்டையோடு என்று பெயர்சூட்டியதாகட்டும்,தக்காளி...
பெரியப்பா குடும்பத்தோடு மாதம் தோரும் கடைசி ஞாயிறு அன்று சிவத் தலங்களுக்கு சென்று வழி படுவது வழக்கம் .அடியேன் ப்ரீயாக இருப்பின் அவர்களோடு பங்கேற்ப்பது வழக்கம் .இந்த முறை அடியேன் மிகவும் வெட்டியாக இருந்தமையால் அனைவரோடும் கோவிலுக்கு செல்வதென்று முடிவு செய்தேன். இந்த முறை திருநல்லூர் ஸ்ரீ் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு செல்வதென்று முடிவாகியது. பொதுவாக பெரியப்பா அழைத்துச்செல்லும் கோவில்கள் அனைத்தும் அடியேன் அறியாததாகவும் பழம் பெருமை வாய்ந்ததாகவும் , சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இருக்கும்.அடியேன் ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு வரலாற்றை அறிந்து வியந்து தான் வந்திருக்கிறேன்.கும்பகோணம் தாண்டி பாபநாசம் முன்னால் வழைப்பழக்கடை ஸ்டாப்பிங் ல் ( அங்கு வழைபழக்கடைகளே இல்லை- என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது) இறங்கி நடந்தால் சுமார் 1.5 கி. மீ தொலைவில் கோவில் அமைந்திருந்தது . உள்ளே சென்றதும் லிங்கமானது நாள் தோறும் பல்வேறு வண்ணங்களில் மாறி மாறி காட்சியளிப்பதை எண்ணி வியந்தேன். 1. 6.00-815( தாமிர நிறம்) 2. 8.16-11.30 ((இளஞ்சிவப்பு...
Comments
Post a Comment