Posts

Showing posts from April, 2020

எல்லாம் மனுசங்க தான்...!!

Image
பொறியியல் படித்த அனைவருக்கும் குறிப்பாக C ore Department ஆசாமிகளுக்கு சொந்த நாட்டிலே கைநிறைய சம்பாரிப்பது எட்டாக்கனி , ஐந்தாயிரத்தில் தொடங்கி.... ஐந்பதாயிரத்தை எட்டுவதற்குள் ஆயுள் முடிந்துவிடும். வேறு வழி தெரியாமல் பணத்தின் பொருட்டு வேலைக்காக அண்டை நாடு நோக்கி பயணப்படுபவர்களே ஏராளம்.அடியேனும் அவர்களில் ஒருவன்..!! ஓமான் செல்லத் தாயாரான பொழுது உள்ளம் எல்லாம் நிறைந்து கிடந்தது அச்சம் தான். காரணம் அது ஒரு இஸ்லாமிய நாடு. சிறு வயது முதலே நமது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் கொடுத்த அளவற்ற பயம். இஸ்லாமியா நாடுகள் என்றாலே ஒரு வித அச்சம். நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்தா ஒரு பிரச்சனையும் வராதுன்னு எனக்கு நானே ஒரு தைரியாத்தை வர வச்சிக்கிட்டு தான் ஓமான் வந்தேன். ♣ வந்து இறங்கிய உடனே என்னை அழைச்சிட்டுப்போக வந்தது ஒரு ஓமானி. என் நிறுவன PRO. He: Hello, Sharavanakumar, how are you?? Me: yeah, fine sir… உடம்பு முழுக்க நடுக்கம் வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு . பதிலுக்கு நல்ல இருக்கீங்களான்ன்னு கூட கேட்கலை. வில்லா (Villa) வந்து சேரும் வரை எதும் பேசலை. ஒரு வழியா வந்து இறங்கி தோ...

பழக்குதல்...! ☺☺☺

Image
கட்டுப்பாடற்ற சூழலில் வளர்ந்த ஒருவரை , ஒரு குறிப்பிட்ட விதிக்கு பழக்குதல் என்பது அவ்வளவு எளிதல்ல... அவர் அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். வாழ்நாளில் ஒரு பகுதியாக அதனை ஆக்கிக்கொள்ள வேண்டும். சொன்னால் கேட்பானா மானுடன். ஆறறிவின் அக்மார்க் முத்திரை வாங்கியவன் அல்லவா ? நீ யார் சொல்வது நான் யார் கேட்பது என்பது அவன் ஆழ்மனத்தின் வேராய் படர்ந்துவிட்ட ஒன்றல்லவா ? சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்றால் கேட்பானா ? அதற்காக கொண்டுவரப்பட்டதே அபராதங்கள். அபராதம் அளித்தும் அடங்கவில்லை என்றால் சிறை. அது தான் வழக்கம்.ஏகப்பட்ட வழிமுறைகள் இதற்கென்றே வகுக்கப்பட்டுள்ளது. கடைபிடிக்க வேண்டிய மக்களும் காதில் போட்டுக்கொள்வதோடு சரி. செயலில் சுத்தம்.ஆனால் இடையில் இந்த காவல் துறை அன்பர்கள் சட்டத்தினை பின்பற்றாதவர்களை கையாளும் முறை இருக்கிறதே... லத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் இருக்கிறதே!! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பதை ஆழ் மனதில் அழமாக உள்வாங்கிக் கொண்டவர்கள். கை நீட்டிவிட்டே கதைக்கும் உத்தமர்கள். ☻☻ நான் பேசுவது பெரும்பான்மையை. சிறுபான்மை உத்தம காவலர்கள் இதில் அடங...

கொளுத்துங்கள் கப்பலை...!!

Image
அவனுக்கு ஒரே ஆசை தான். எப்பாடு பட்டாவது,வெற்றிப் புதையலை அடைந்து விடவேண்டும். அதற்காக உயிரையும் துச்சமென இழக்கத் துணிந்தவன். சளைக்காமல் போராடும் வலிமை பெற்றவன். இரத்த நாளம் ஒவ்வொன்றிலும் போராட்ட குணம் ஊறிப்போனவன். அவன் ஒரு தளபதி. தளபதி மட்டும் எண்ணினால் போதுமா? ஒட்டு மொத்தப் படையும் அல்லவா எண்ண வேண்டும். அதற்காக அவன் எடுத்த ஒரு முயற்சி வரலாறாகிப் போன கதை தான் இது. ஒரு நகரைக் கைப்பற்ற , 500 படை வீரர்களோடு நாவாயில்  கிளம்பினான். வெல்வது ஒன்றே குறி. எக்காரணம் முன்னிட்டும் பின்வாங்குதல் கூடாது.தான் நினைத்தால் மட்டும் போதுமா? ஒட்டு மொத்தப் படையும் அல்லவா நினைக்க வேண்டும். ஒரு திட்டம் வகுத்தான்.கைப்பற்ற வேண்டிய நகரின் கடற்கரையை அடைந்ததும் வீரர்களுக்கு ஒரு கட்டளை இட்டான். 'நாம் வந்த கப்பல் அனைத்தையும் கொளுத்துங்கள்'(BURN THE SHIP) என்பதே அது. இதைக்கேட்ட வீரர்கள் அனைவரும் ஆடிப்போனார்கள்.  வந்த கப்பலைக் கொளுத்திவிட்டு திரும்பிசெல்வது எவ்வாறு?  இருப்பினும் உத்தரவை மீறிட முடியாதே! செயல்படுத்தினார்கள். நாவாய்கள் அனைத்தும் நாசமாய்ப்போனது. வீரர்கள் முன்னால் வந்து பேசினான். ,'...