செவ்வாயில் மனிதன்..!!
இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் ஏலியன் குறித்தான செய்திகளுக்கும், பல்வேறு வகையான கற்பனைகளுக்கும் அஸ்திவாரமிட்டது 1971ல் நாசாவின் செயற்கைக்கோளான வைகிங் 1(viking1) வெளியிட்ட ஒரு புகைப்படம். செவ்வாயை ஆராய நாசா அனுப்பிய அந்த விண்கலம் சைடோனியா(cydonia) எனும் செவ்வாயின் பரப்பை எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் சாட்சாத் மனிதனின் தலைபோன்றே ஒரு உருவம் பதிவாகியிருந்தது. அவ்வளவுதான், நம் ஊரில் எப்படி விநாயகர் வடிவத்தில் ஒரு மரம் இருந்தால் அதை சாமி ஆக்கிவிடுகிறோமோ.! அதே போல் அந்தப்புகைப்படம் வெளியானதும் பலரும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்கிறார்கள், இல்லை அவர்கள் ஏலியன்கள் என்பது போன்று அவரவர் சார்ந்து ஒரு முடிவுக்கு வந்து தொலைத்தார்கள்.வதந்தி வாயர்கள் எந்த ஒரு காலத்திலும் தங்கள் சேவையே நிப்பாட்டியதே இல்லை. செவ்வாயில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதை வைத்து சிலர் தொடர்ந்து பேசவும் செய்தார்கள்.நாசா ஏதோ மறைப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள் இந்த ஆராய்ச்சிப் புலிகள். "face of mars" மிகப்பெரும் பேசுபொருளானது. அதைத்தொடர்ந்து ஏலியன் சார்ந்த படங்களும், மற்ற கிரகங்களை சார்ந்த மனிதர்...