நடுநிலை இடியட்ஸ்...!
தற்கொலையை , கெளரவக்கொலையை , முன் விரோதக் கொலையை கண்டித்தும் , மனித நேயத்தை வலியுறூத்தியும் மணிக்கணக்காக பேசும் நீதி வழுவாதவர்கள் இந்த நடுநிலையாளர்கள் . அவர்களுக்கு பாராட்டுக்கள் . வாழ்த்துக்கள் . கூடவே , விலங்குகளையும் , பூச்சிகளையும் காக்கும் ஜீவக்காருண்யக்காரர்களாக இருப்பது குறித்தும் பெருமிதம் கொள்கிறேன் . பைக்கை நிப்பாட்டும் போது கூட நடு ஸ்டாண்டையே பயன்படுத்தும் உத்தமர்கள் . கைத்தட்டவும் , விளக்கேற்றவும் சொல்லி காலத்தை கொல்கிறவர்கள் பற்றியோ , தவறான நிதிக்கொள்கைகளால் நாட்டின் செல்வத்தைக் கொல்கிறவர்கள் பற்றியோ , நாட்டின் பொருளாரதாரத்தை கொத்து பரோட்டா போட்டு தனியார் சுவைக்க கொடுப்பவர்கள் குறித்தோ பேசும் போது மட்டும் , நடு ஸ்டாண்டுக்கு பதிலாக சைடு ஸ்டாண்ட் எடுப்பது ஏனோ ? Cause and effect என்று ஒரு கோட்பாடு உண்டு . காரணமும் அதன் விளைவுகளும் . கொலை கொள்ளை எல்லாம் வெளிப்பாடுகள் . விளைவுகள் . Effects of causes. இவற்றிற்கெல்லாம் உண்மையான காரண...