மற்றுமொரு ஆன்மீக வாரம் ... ஆம் .. மாதம் தோரும் சிவத்தலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களோடு செல்வது வழக்கம் தான் , இருந்தாலும் இந்த வாரம் சற்றே விஷேசமானது , சென்ற கோவிலும் கூட , கோவிலின்பெயர் ”ஸ்ரீ் பிரளயகாலேசுவரர் , பெண்ணாடம்” , கோவிலைப்பற்றி பேசுவதற்க்குமுன்னர் ஊரைப்பற்றி தெரிந்து கொள்வோம். பெண்ணாடம்=பெண்+ஆ+கடம் , பெண்=சப்தகன்னிகைகள் , ஆ= காமதேனு , கடம்=யானை (குறிப்பாக இந்திரனின் வெள்ளை யானை) , சப்தகன்னிகைகள் , காமதேனு , யானை , இவை மூன்றும் இக்கோவிலுக்கு வந்து தொழுதமையால் , அவ்வூருக்கு ‘ பெண்ணாகடம் ’ எனப் பெயர் வந்ததாகவும் , அதுவே பின்னர் ‘ பெண்ணாடம் ’ என மறுவியதாகவும் கூறுகின்றனர். ஒவ்வொரு கோவிலனது சிறப்பையும் அங்கு குடி கொண்டிருக்கும் கடவுளின் பெயராலே அறிந்து கொள்ளலாம். ஸ்ரீ்பிரளயகாலேசுவரர் , பிரளயம் தோன்றும்பொழுது காத்தருளியவர் என்பது பெயராலேத் தெளிவாகிறது. (பிரளயம் என்பது லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் எனவும் , அப்பொழுது அனைத்து உயிர்களும் மடிந்து பின்னர் புது யுகம் பிறக்கும் எனவும் , பிரளயத்தின் போது காக ...
Comments
Post a Comment