Posts

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!

"யார் கண்டுபிடித்தது? யார் சொல்லியது? யார் பேச்சைக்கேட்டுப் பின்பற்றுகிறார்கள்?"  என்று தான் தெரியவில்லை. புதிது புதிதாக எதையாவது தூக்கிக்கொண்டுத்திரிகிறார்கள். "ஏன்? எதற்கு? என்ற சொற்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதா?" என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுகிறது. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் செய்யும் ஒரு அடிமைக்கூட்டமாய் பெரும்பான்மை சமூகம் எப்படி இருக்க முடியும்? முடிகிறது. கண்ணெதிரே உயிருள்ள ஜடமாய் ஆறறிவு மனிதனென பெருமைப்பீற்றிக் கொண்டே நடமாடிக்கொண்டிகிறது. கடவுள் விடயத்தில் கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறது என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். மறுகேள்விக்கு மனம் வராது. போய்த்தொலைகிறது அவரவர் நம்பிக்கை என்று விட்டால், இன்று எல்லாவற்றிற்கும் அதையே தூக்கிகொண்டு வருகிறார்கள். ஆங்கிலப்புத்தாண்டு என்ற ஒன்று வருகிறது. ஒரே பரபரப்பு. பட்டையும் கொட்டையுமாய் ஒரு கூட்டம். பாட்டிலும், ஆடலும், பாடலுமாய் ஒரு கூட்டம். அவரவர் இஷ்டம். குறையொன்றுமில்லை. இதோ, இன்று தமிழ்ப்புத்தாண்டு. ஆங்கிலப்புத்தாண்டு போல் அவரவர் விருப்பத்திற்கு கொண்...

சால்ட்டுமா..!!

சில வார்த்தைகள் நெருஞ்சி முள் போல் தைக்கும், சிலது ரோஜா போல் இனிக்கும். இன்று அவனைத் தைத்தது நிச்சயம் நெருஞ்சி முள் தான். இரண்டு மணி நேரம் சண்டைக்காட்சிகளால் ஆன படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் யாரையாவது பிடித்து அடித்து மண்டையை உடைத்தால் தேவலாம் என்பது போல் இருக்குமே ஒரு மனநிலை, அந்த மனநிலையில் தான் இருந்தான். அவ்வார்த்தையைக் கேட்டதில் இருந்து. தலையில் யாரோ சுத்தியை வைத்து நங்நங்கென்று அடிப்பது போல் இருந்தது. ரமண மகரிஷி போல், நான் யார்? எதற்காக வாழ வேண்டும்? என்றெல்லாம் கேட்டுக்கொண்டான். எச்சில் கூட விழுங்கப் பிடிக்கவில்லை. அவ்வார்த்தைத் தொண்டைக்குழியை பட்டர்பிளை வால்வு போல அடைத்துவிட்டது. வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. எதற்காக வாழ வேண்டும் என மீண்டும் மீண்டும் யோசித்தான். தலைவலி. சுருக் சுருக். அவ்வார்த்தையைக் கேட்டுத்தொலையாமல் இருந்திருக்கலாம். ஒரு நிமிடம் சாவது குறித்துக்கூட யோசிக்கலானான். எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணங்கள் விரிந்தது. சட்டென்று அவ்வார்த்தை நினைவில் தோன்றி மறைய, அதையும் வெறுத்தான். தொலைக்காட்சியில் யாரோ எதையோ சாதித்த செய்தி கேட்டது, இந்தப் *@%# ம...

2023−ல் என்ன கழட்டினேன் மற்றும் 2024-ல் என்ன கழட்டப்போகிறேன்!!!

Image
எல்லா வருடமும் குறிப்பிட்டுச் சொல்ல சில சாதனைகளோ, துன்பியல் நிகழ்வுகளோ ஏதாவது ஒன்றாவது மெமரி குடோனில் இருக்கும். ஆனால், இந்த 2023−ஆம் ஆண்டுதான் எந்தவித பேரின்பமும், பெருந்துன்பமும் தராமல் தன்னளவில் வந்தான் போனான் வகையறாவாகவே  அமைந்தது. பொட்டிப்படுக்கையை மிகக்குறைவாகவே கையில் சுருட்டிக்கொண்டு பயணம் கிளம்பியிருக்கிறேன். ஜி அளவுக்கு பயணமெல்லாம் நமக்கு ஆண்டுதோறும் அமைந்ததில்லை,அமைவதுமில்லை,அமையப்போவதும் இல்லை. 2023−ல் செய்த முக்கியப் பயணமென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக குவைத் சென்று வந்தது மட்டும் தான் தேறும். அதுவும் வேலை நிமித்தமாகத்தான். இருந்தாலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு குறைந்தபட்சம் குவைத்தைச் சுற்றிப்பார்க்க முடிந்தது பேராச்சரியம். பஞ்சதந்திரம் கமல் கேங் போல நல்ல நண்பர் வட்டம் அமைந்தது. நிமிடந்தோரும் சிரிப்புமழை. வாயைத் திறந்தாலே, மூடிட்டு இருடா ல** என பங்கமாய் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். கூட்டாகச் செய்த பெயர் சூட்டும் சம்பவங்கள் தான் மிகக்கொடூரம். நூடுல்சிற்கு மண்புழு என்று பெயர் வைத்ததாகட்டும், தலைக்கவசத்திற்கு மண்டையோடு என்று பெயர்சூட்டியதாகட்டும்,தக்காளி...

நோ மீன்ஸ் நோ பாடிய அரபுக்கிளி..!

என்றோ போலீஸ் டிரைனிங் அகாடமியில், காம்பவுண்ட் சுவர் இல்லாத காலத்தில், மாடுகள் நுழைந்து அங்கு வளர்த்துவந்த செடிகளைத் துளிர்விட துளிர்விட பகலிரவுப் பார்க்காமல் தின்று வைக்க, அவை மேற்கொண்டு  மேய்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு பெயர் தெரியாத உயராதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் தினம் ஒரு காவல் அதிகாரி மாடுகளை விரட்ட காவலுக்கு நிற்க வைக்கப்பட, அந்தச் செடி மரமாகிவிட்ட இன்றும் ஒரு போலீஸ்காரர் இரவுகளில் மரத்தடியில் நின்றுகொண்டிருப்பார். ஏன் நிற்கிறார் என்று அவருக்குத் தற்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உயரதிகாரி நிற்கச்சொன்னார் அதனால் நிற்கிறார். இந்தக்காட்சி டாணாக்காரன் படத்தில் வரும். ஏன்? எதற்கு? என்றெல்லாம் அதிகாரிகளிடம் கேட்க முடியாது. அதிகாரி சொன்னால் கேட்க வேண்டும். அவ்வளவு தான். அரசு இயந்திரம் என்று சும்மாவா சொன்னார்கள். உயர் அதிகாரிகளின் கட்டளையே சாசணம். அதை எதிர்த்து பேசிய பட்டாபியின் நிலையையும் அந்தப் படத்தில் பார்த்தோம் அல்லவா! அதே போல் தான் எங்கும். அதிகாரி சொன்னால் பால் கசக்கும் என்று கூட  ஆமோதிப்பார்கள்.  கொரானா நேரத்தில் நாளொரு உத்தரவு, மணிக்கொரு மாற்றம் என விம...

அடிச்சித்தான் கேட்கணும்..!!

ஒரு சின்ன வேலையா அலுவலகத்தான்ஸ் நேற்று  இதுவரைக்கும் காலடிபடாத பாலைவனத்தோட ஒரு கடற்கரை நகருக்கு அனுப்பிவச்சானுங்க. பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சொன்னாலும் யாருக்கும் தெரியப்போறது இல்லை. விட்டுத்தள்ளுங்க, இது ஒரு பாலைவன ராம்நாடு.  பெரும்பாலும் பாலைவனத்துல இருக்குற ஒரே நல்ல விஷயம் ஐந்து நட்சத்திரக் குறியீடு ஹோட்டல் அளவு இல்லாட்டியும் இரண்டு நட்சத்திரக் குறி ஹோட்டல் அளவுக்காவது குவாலிட்டியா ரூமும், சோறும் கிடைக்கிறது தான். என்னடா இம்புட்டு குவாலிட்டியா தரானுங்களே இவனுங்களுக்குக் கட்டுபடியாகுமான்னு அங்க இங்க உருட்டிப்பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கம்பெனி நமக்கு பத்து ரூபா செலவு பண்ணா, நம்மளை வச்சி நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாரிப்பானுங்கன்றது. சரி சொந்தமா முதல் போட்டு கம்பெனி நடத்துறானுங்க பிழைத்துப்போகட்டும்ன்னு கண்டுக்காம இருக்கலாம் தான். ஆனால், இதுலயும் சில பேராசைப் பெருச்சாளிங்க இருக்கானுங்க. மருந்துக்கும் தொழிலாளிங்களைக் கண்டுக்காம அவசரகாலத்துல அரசாங்கம் ரெடி பண்ற கேம்ப் கணக்கா ரூமும், எங்கேயாவது வெள்ளம் வந்தா ஊறுகாய் பாக்கெட்டை உதவியா வழங்குற திடீர் வள்ளல் கணக்க...

சங்கிகளின் கதறல் ..!

சங்கிகள் என்றாலே கதறல் , கதறல் என்றாலே சங்கிகள் என்பது மாமாங்கமாய் பார்த்து வரும் ஒன்று தான்.இருப்பினும் இந்த சங்கிகளால் மட்டும் எப்படி ஓவ்வொரு முறையும் சீசனுக்கு சீசன் நாயின்  குரைச்சல் மாறுவது போல் மாற்றி மாற்றி கதறி அசரடிக்கமுடிகிறது என்பது ஓர் உலக வியப்பே! சமீபத்திய டவுசர்  ஒன்றின் பினாத்தல் தான் அசரடித்தது . பேச்சு  வாக்கில் டவுசரிடம்   தமிழகம் பெண்களுக்கு எப்போதும்  பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஆண்களின் அணுகுமுறை மற்றும் வளர்ப்புமுறையே காரணம் என்று சொல்லித்தொலைத்தாலும் தொலைத்தேன் . வெகுண்டெழுந்து விட்டார் திரு சங்கியார் அவர்கள். தமிழக ஆண்கள்  எல்லாம் சுய புத்தி இல்லாமல்  பெண்கள் பேச்சை கேட்டு நடப்பவர்களாம். பெண்களுக்கு தாமதமாய் திருமணம் நடத்தி வைப்பவர்களாம். குடும்பத்தின் அத்தனை முடிவுகளையும் பெண்களே  எடுக்கிறார்களாம் . தமிழக  ஆண்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறார்களாம் .  நாடாளுமன்ற தேர்தலில்  மோடி எனும் ஆணை தோற்கடித்து...

ஓமானிலும் விக்ரவாண்டி உணவகங்கள்..!!

பேருந்து பயணத்தில் பெரும் அசெளகரியத்தைத் தருபவர் மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதலாமவரான உணவார் அவர்கள். நெடுந்தூரப்பயணங்களில் இவர் கொடுக்கும் இடைஞ்சல் சொல்லி மாளாது. டைமுக்கு சாப்பிட்டு பழகுன நமக்கு பேட் டைம் உருவாக்குபவர். ஊருக்குப்போறோம்ன்னு தெரிஞ்சாலே கடை சாப்பாடு ஒத்துக்காது ராசான்னு இந்தத் தாய்க்குலங்கள் எலுமிச்சையை கசக்கி, சாறெடுத்து, கடலை பருப்பை வறுத்து, கொஞ்சம் நல்லெண்ணெய் சூடு பண்ணி,கடுகைப்போட்டு வெடி வெடிச்சு விளையாடி, கருவேப்பிலையை சேர்த்து வதக்கி, பிழிஞ்ச எலுமிச்சை சாறை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கொஞ்சம் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சைவாசம் போய் எலுமிச்சை ரசத்துக்கான யுனிவர்சல் வாசம் வந்ததும், சோற்றைக்கொட்டிக் கிண்டோகிண்டுன்னுகிண்டி பொங்கலாக்கி  பொட்டலம் கட்டி தந்தாலும், அதைத் தூக்கிட்டுப்போய் நிம்மதியா ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிட வாய்க்காது. ரன்னிங்ல பொட்டலத்தை அவுத்தா மொத்த பஸ்சும் நம்மளை கட்டுச்சோற்றை அவுத்துட்டான்டா காட்டாண்டின்னு கண்ணாலயே கற்பழிப்பானுங்க. அந்த "ச்சீசீப்" பார்வையைத் தவிர்க்கவே பயணங்களில் பொட்டலத்தைத்தூக்கும் பொட்டலத்தலைம...