Posts

Showing posts from July, 2015

குறுக்கு வழியில் கணக்கு...!!

Image
      சில எளிய முறை கணித வழிகளை இங்கு பார்க்கலாம். “ஒரு எண்ணை ஆறால் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்”   உதாரணம் ; 500 ஐ 6 ஆல் பெருக்க வேண்டும் என்றால் முதலில் அதை இரண்டால் வகுத்துக் கொள்ள வேண்டும்.       500/2=250 “ பிறகு வகுத்து வந்த எண்ணை 10 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும் “       25௦*10=2500 “ பெருக்கிய பின் கிடைத்த விடையை முதலில் எடுத்துக் கொண்ட ஆறால் பெருக்க வேண்டிய எண்ணோடு கூட்டினால் விடை கிடைத்துவிடும்”       2500+500=3000 ;(50 ௦ *6=3000) மேலும் சில உதாரணங்கள் ;     # 568 ஐ ஆறால் பெருக்க வேண்டும் என எடுத்து கொள்வோம்.       568/2=284                                         ...

ஹம்பியும் அந்நியன் அம்பியாகிய நானும்....!

Image
      இந்த நியூ இயர் ரிசல்யூஷன்ல ஒன்னு வாரா வாரம் எங்கயாச்சும் விதியேனு   சுத்தறது. கொஞ்ச காலம் அதாவது , கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஒழுங்காக சென்றிருப்பேன்.அதுக்கப்புறம் நிதிப்பிரச்சினை , பிரண்ட்ஸோட பிரச்சனை , மாசத்துக்கு ஒரு தடவையா ப்ரோகிராம மாத்துனேன். அப்புறம் கர்நாடகா வந்ததும் சுத்தமா ஊர் சுத்துறது நின்னு போச்சு. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா ? .. திரும்பவும் எனக்குள்ள இருந்த ஊர் சுற்றும் ஊரிலில்லா முனிவர்   படக்குன்னு முழிச்சுக்கிட்டார். அதுக்கேத்த மாதிரி கம்பெனிலையும் வொர்க் ஆர்டர் கொடுக்க லேட்டாக , போடுடா பிளான்னு , எனக்குள்ளயே தட்டு தடுமாறி , முட்டி மோதி , பணம் , டிராவலிங் டைம் எல்லாத்தையும் யோசிச்சு ரெண்டு ஆப்ஷன கண்ணு முன்னாடி வைச்சேன்.   1.   ஹம்பி   2. துங்கபத்திரா ரெண்டுமே ஏறக்குறைய ஒரே டிஸ்டன்ஸ் , துங்கபத்திரா டேம்க்கு ( dam)   நைட் இல்லாட்டி மாலை வேளை தான் பெஸ்டுனு ஒரு அதிமேதாவி சொல்ல , சரி விட்றா வண்டிய ஹம்பிக்குனு கெளம்புனோம்.( அண்ணன் சிம்சனும் உடன் வந்தார்)      ...

என்ன கொடுமை இது.??

என்னை உருக்குலைத்த  சம்பவம் 29.9.2006-ல் நடந்த கயர்லாஞ்சி படுகொலை. மஹாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமம் கயர்லாஞ்சி. இந்த ஊரைச் சேர்ந்த பையாலால் போட...

இதுவரை இல்லாத ஆன்ட்ரியா...!

Image
      தேன்குரல் என்று கூறுவதில் எவ்வித சங்கடமும் இல்லை. நான் அஞ்சலி பாப்பாவின் குரலை சொல்லவில்லை . ஆன்ட்டி ஆன்ட்ரியாவின் குரலைத்தான் சொல்கிறேன்.இங்கே அன்ட்டி என்று கூறியமைக்கு மன்னிக்கவும்.அவர் என்ன தான் கவர்ச்சியின் உச்சம் காட்டி நடித்தாலும் , எனக்கு என்னவோ அது ஆன்ட்ரியாவுக்கு வெட்டி வேலை என்றே சொல்லத் தோன்றுகிறது.அவரது உடலழகை விட குரலழகை பெரிது ரசிப்பவன் , நேசிப்பவன் நான்..எத்தனை முறை கேட்டாலும் மறுபடி மறுபடி போட்டு போட்டு கேட்கத்தூண்டும்   காந்தக்குரல் அவருடையது.அவர் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு முழுநேரம் பாட்டுபாடுவதில் கவனம் செலுத்தலாம் என்பது என் விருப்பம் . எத்தனை முறை கேட்டிருப்பேன் அந்தப்பாடலை . இன்னும் எவ்வளவு காலத்திற்கு எத்தனை முறை கேட்பேன் எனத் தெரியவில்லை. அலுக்காமல் ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.       கோவா படத்தில் வரும் “ இதுவரை இல்லாத ...” அவர் பாடியதில் மாஸ் ஹிட் என்று அடித்துக் கூறலாம். மிக அற்புதமாக பாடியிருப்பார்.கங்கை அமரன் தான் பாடலை எழுதியிருக்கிறார். சன் சிங்கரில் ஜட்ஜாக போட்டு கங்கை அமரனை...

இரண்டு தாத்தாக்கள்- two grandpa`s

Image
நான் பள்ளி விடுதியில் இருந்த காலத்தில் அடிக்கடி மீட்டிங் நடைபெறும். அறிவுரைகள் , புகார்கள் , விளக்கங்கள் , தேவைகள் என அனைத்தைப்பற்றியும் ஆசிரியர்கள் எங்களோடு கலந்துரையாடுவார்கள்.       பெரும்பாலும் படித்து , படித்து சோர்வுற்ற எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமான கதைகள் , கருத்துக்கள் அந்நேரம்   வழங்கப்படும். பிகாஸ்   காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வே இல்லாத , படிப்பைத்தவிர வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாத நாட்கள் அவை. எந்த வகையிலும் நாங்கள் மனச்சோர்வு அடைந்திடக்கூடாது என்பதில் எங்கள் பள்ளி நிர்வாகம் தெளிவாக இருந்தது.       அந்த கலந்துரையாடலில் அடுத்தவாரம் என்ன படம் திரையிடப்படும் என்பது குறித்த குறிப்பை அளித்து உற்சாகம் ஊட்டுவார்கள். வாராவாரம் ஞாயிற்றுகிழமைகளில் moonlight dinner , ஒரு புது படத்தோடு பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும். அன்று மட்டும் படிப்பை இரவு 7 மணியோடு ஏறக்கட்டிவிடுவோம். எங்களுக்கு சந்தோஷமான நாள் என்றால் வாரத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே. மற்ற நாட்கள் , மார்னிங் டெஸ்ட் , ஈவ்னிங் டெஸ்ட் ...