Posts

Showing posts from January, 2015

கங்கை கொண்ட சோழன்.... சோழர்களின் வீர வரலாறு...

Image
    பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது பாலக்குமாரனின் ஒரு ஆன்மீக நாவலை படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.அடியேனுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பினும் , தலங்களுக்கு செல்லும் விருப்பம் அதிகம் உடையவனாக இருப்பினும் , ஆன்மீகத்தை எழுத்தின் மூலம் படிக்கும் அளவுக்கு   பொறுமை துளி கூட கிடையாது. அந்த நாவலை பத்து பக்கம் படிப்பதற்க்குள் நூறு முறை கண்கள் சொக்கியது. அன்று முதல் பால குமாரன் அவர்கள் ஆன்மீகம் பற்றி மட்டுமே எழுதும் பெரியவர் என அவரையும் அவர் புத்தகங்களையும் அரவே ஒதுக்கிவிட்டேன். ****************************                   உதயா மாமா   40 வயதைக் நெருங்கிய சீனியராக இருப்பினும் டிரண்டில் இருப்பவர். ஜாலியாக பழகும் மனிதர். அவர் வரலாற்றின் மீது அவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார் என்பதை அவர் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் போடு என்று கூறும் வரை   அடியேன் அறியவில்லை.....மாமா அவர் புக்ஸ்லாம் போர் , படிச்சா தூக்கம் தான் வரும் , அதைப்போய் ஏன் வாங்குறீங்க ? என கே...

அண்ணன் கருப்பையாவோடு ஒரு “இசை”ப்பயணம்.........

Image
     கருப்பு அவர்களை கடந்த முறை கடுமையாக விமர்சித்தமையால் , அண்ணன் சற்று அப்சட்டாக இருந்தார். எப்படியாவது தன் மேல் நல்ல அபிப்ராயம் மற்றவர்களுக்கு வர வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார். அதன் சிறு முயற்ச்சியாக நான் வேண்டாம் எனக் கூறிய போதும் எல். ஏ. சினிமாவில் “இசை”திரைப்படத்திற்கு 2 டிக்கட்டுகளை புக் செய்துவிட்டார்.அண்ணன் இரண்டரை ஆண்டுகளில் இதுபோன்று டிக்கட் புக் செய்தது இல்லை. அதனால் , ஆச்சரியத்தோடு விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் அண்ணன் “ டிக்கட்டுக்கு நான் காசு போட்டுக்கிறேன் , ஸ்நாக்சுக்கு நீ போட்டுக்க ?!!” என கூறினார். எனக்கோ தூக்கி வாரிப்போட்டது . ஏனென்றால் டிக்கட்டை விட ஸ்நாக்சுக்கு தான் எல். ஏ .தியேட்டரில் செலவாகும்.     “வேண்டாம் வேண்டாம் நான் டிக்கட்டுக்கு காசு கொடுத்துடுறேன் , ஸ்நாக்சு செலவை ஷேர் செய்து கொள்ளலாம்   “ என கூறினேன் . அண்ணனும் தலையசைத்தார்.      6.40 ஷோவுக்கு அரக்க பரக்க கெளம்பி போய் சேர்ந்தோம்.போனதும்   சில பல செல்பிகளை எடுத்து தள்ளினோம். தியெட்டருள் நுழைந்ததும் ...

4 இயர்ஸ் ஆப் இன்ஜினியரிங் = 2 கோரைப்பாய்........

Image
    நாலு வருஷமா இன்ஜினியரிங் படிச்சி என்னத்த டா கிழிச்ச–னு எவனாவது கேட்டா 2 கோரைப்பாய்னு பதில் சொல்லுவேன்.ஆம் அடியேன் கடந்த நான்கு ஆண்டுகளாக 1.படிக்க இரவல் வாங்கிய   , 2.படிக்க காசு கொடுத்து வங்கிய , 3.பாரின் ஆத்தர் புக்ஸ்(பெரும்பாலும் தலையணையாய் பயன்படுத்தப்பட்டவை) , 4.ஜெராக்ஸ் போட்ட ஸ்டடி மெட்டீரியல்ஸ் , 5. ரெபரஸ்க்காக சீனியரிடம் வாங்கிய பழைய ரெக்கார்ட்ஸ் , 6. இன்டர்னல் டெஸ்ட் பேப்பர்ஸ் , 7. கொஸ்டின் பேப்பர்ஸ் , 8. லேப் மேனுவல்ஸ் 9.லேப் அப்சர்வேசன்ஸ் 10.ரப் நோட்ஸ் 11. நான் எழுதிய ரெக்கார்ட்ஸ் 12. நான்குஆண்டுகளாக வாங்கிய குங்குமம் , குமுதம் , போன்ற மெகசின்கள் . 13. தினசரி செய்தித்தாள்கள் 14. இதர பேப்பர்ஸ் என எல்லாவற்றையும் எடைக்கு போட்டதில் 430 ரூபாய் தான் கிடைத்தது. இவை எல்லாவற்றையும் வாங்க ஜெராக்ஸ் போட ஆண்டுக்கு நான் செலவு செய்தது 10 , 000 ரூபாய் என கணக்கு வைத்தாலும் 4 ஆண்டுகளில் சுமார் 40 , 000 ரூபாய் வருகிறது..... ஆனால் இவற்றைக் கொண்டு அடியேன் தேர்வில் பாஸ் ஆனேனே தவிர பெரும்பாலான சப்ஜெக்ட் எதுவும் தற்பொழுது என் நினைவில் இ...

ஸ்பெஷல் பங்சனும் , ஸ்பெஷல் வேண்டுதலும்......

Image
     “பாய் ரிசல்ட் என்ன ஆச்சுடா ?”      “ஆல் கிளியர் டா ”      “ஸ்பெஷல் பங்சன் ??? ”      “அதுவும் கிளியர் டா “      “ எப்படி டா ??”      “நான் ஒன்னுமே எழுதல , எப்படியோ கிளியர் ஆகிடுச்சு !.... எல்லாத்துக்கும் அல்லா தான் காரணம் , டெய்லியும் ஸ்பெஷல் பங்சன் கிளியர் ஆகனும்-னு அல்லா கிட்ட ஸ்பெஷலா வேண்டிக்கிட்டேன். அவர் தான் காப்பாத்திவிட்டார். ”      “அப்படியா !!!! சரிடா “ கடந்த முறை செமஸ்டர் தேர்வு ரிசல்ட் வந்த பொழுது எனக்கும் பாஷா பாய்க்கும் நிகழ்ந்த உரையாடல் இது..தான் ஆல் கிளியர் செய்ததற்கு காரணம் அல்லா தான் என நண்பன் கூற , அடியேன் நான் வெஜ் சாப்பிடும் தீவிர சிவ பக்தன் ஆக இருப்பினும் , ஆல் கிளியர் ஆக வேண்டும் என வேண்டிக்கொள்ளாதது பற்றி சற்று வருத்தம் கொண்டேன். இவ்வுலகில் கடவுளின் துணையன்றி சில விஷயங்கள் நிகழாது என அடியேன் அப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.       நாமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் , ‘’ எப்...