Posts

Showing posts from June, 2015

தேடி ஓடுனேன்..!!!

Image
      ஒன்னுமே தெரியலை !! எதுவுமே புரியலை!! கர்நாடக வந்த புதுசுல பெரிய பிரச்சனையா இருந்தது இந்த language தான். சும்மா ஒரு ஐந்து நிமிஷம் அமைதியா இருக்காத நான் இங்க வந்ததுல இருந்து பேச ஆள் இல்லாம தவியா தவிச்சுக்கிட்டு இருந்தேன்.ஊர்ல இருக்கும் பொழுதெல்லாம் பெரும்பாலும் புக்ஸ் தான்.டெய்லி இல்லாட்டியும் காலேஜ் லைப்ரரில போர் அடிக்கிறப்பலாம் books, newspaper தான் கதினு கிடப்பேன்.டெய்லி போகலாம் பட் id card கேட்டு டார்ச்சர் பன்னுவாங்க!. அதனால் மந்திரிங்க மாதிரி அப்பப்போ விசிட். வீட்ல அந்த பிராப்ளம் நகி. என் வீட்ல தினகரன் , சித்தப்பா வீட் ல தந்தி , தினமலர்னு வரிசையா பேப்பர் பார்க்கலாம்.போதாக்கொறைக்கு தெப்பக்குளம் போறப்பலாம் புக்ஸ் , amazon, flipkart னு ஒன்னு விடாம ஆபர்ல எக்கச்சக்கமா புக்ஸ் வாங்கி குவிச்சுவைச்ச்சிடுவேன்.படிக்க , படிக்கவேண்டிய புக்ஸ் எக்கச்சக்கமா இருக்கும்.எந்த கவலையும் , வேலையும் வீட்ல எனக்கு இருந்தது கிடையாது . புக்ஸ் தான் ,…       கர்நாடகா கிளம்புறப்ப ரொம்ப அதிகமா லக்கேஜ் சேர்ந்துடக்கூடாதுனு Books – அ கொஞ்ச கொஞ...

மாலை நேர “ஹஜாரி” ....

Image
   பெரும்பாலும் நைட் ஷிப்ட் என்றால் இரு வேளை உண்பது தான் வழக்கம். காலை மற்றும் இரவு. மதிய நேரம் பெரும்பாலும் உறக்கத்திலே கழியும். இருப்பினும் மாலை வேளைகளில் பசி வயிற்றைக் கிள்ளும். மாலை நேரத்தில் டீயும் , வெங்காய வடையும் தான் உண்டு கொண்டிருந்தேன் , இன்று ஒரு சேஞ்க்கு பானிபூரியை சுவைக்கலாம் என நானும் , சாந்த் அண்ணனும் சென்றோம்.   சிறு பூரிக்களோடு. பெரிய பூரியும் இருந்தது. அது என்னயா ? பெருசா இருக்கு.அதை டிரை பண்ணிப்பார்ப்போம் என முடிவெடுத்து , பானி பூரி வாலாவிடம் கேட்டோம். நாங்கள் ஆங்கிலத்தில் கேட்க அவன் திறுதிறுவென விழிக்க , அவன் ஹிந்தியில் பதில் சொல்ல நாங்கள் திறு திறு வென விழிக்க , ஒரு வழியாக சைகை மொழியில் ஆர்டர் செய்தோம் . அதன் பெயர் “ஹஜோர்” ( அப்படித்தான் நினக்கிறேன்) பெயர் புரியவில்லை.நெட்டில் தேடினேன் அகப்படவில்லை .அண்ணன் சாந்த் அவதானிப்பின்படி அது “ஹஜாரி”. நாமும் அப்படியே வைத்துக்கொள்வோம்.விட்டுத்தள்ளுங்கள் அதை அவன் prepare செய்த விதம் தான் , நான் இங்கு குறிப்பிட வருவது.       அலுமினிய தோசைக்கல்லை சூடாக்கினான் , கொஞ்சம் ...

ஆயிஷா

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வர வேண்டியவள்... இப்படி சிதைக்கப்பட்டுவிட்டாள்... படிக்கும் பொழுது கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை ... கட்டாயம் படித்துப்பாருங்கள்... http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf

அவசரத்தில் உதட்டை சூடு போட்டது...

Image
      எதேச்சையாக சுஜாதாவின் “ ஒரிரவில் ஒரு ரயிலில் “ சிறு கதை படிக்க நேர்ந்தது . அதில் ஒரு நேரத்தில் கதாநாயகன் அவசரமாக காபி அருந்துவார் , அதனால் உதட்டையும் சுட்டுக்கொள்வார் . அப்பொழுது சுஜாதா ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். ” அவசரத்தில் உதட்டை சூடு போட்டது “ என எழுதியிருக்கிறார். ஒரு உயிரற்ற பொருள் உயிருள்ள ஒருவர் மீது எப்படி பாதிப்பை ஏற்படுத்த முடியும் ?.. நாம் தான் “உதட்டை சுட்டுக்கொண்டோம்”. காபி தேடி வந்து நம் உதட்டை சுடவில்லை. இந்தவாக்கியம் சரிதானா ?. சுஜாதாவை குறை சொல்லும் அளவு நான் பெரிய புலியெல்லாம் இல்லை , சிறு நரி தான்.யாராவது தெரிந்தால் விளக்கம் கொடுங்கள். ”அவசரத்தில் உதட்டை சூடு போட்டது “ என்பதை விட ,   ” அவசரத்தில் உதட்டை சுட்டுக்கொண்டேன் “   என்பதே சரியாகப்பொருந்தும். சரிதானா ?? யாராவது தமிழறிஞர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாகயிருக்கும். ஒரே குழப்பமாக இருக்கிறது.

காபி வித் கோட்சே..!!

Image
ஒரு மாலை வேளையில் வழக்கம் போல் இணையத்தை மேய்ந்துகொண்டிருந்தேன். அப்பொழுது சொக்கன் அவர்களது வலைப்பதிவில் தன்னுடைய “ மகாத்மா காந்தி கொலைவழக்கு” குறித்த புத்தகத்தின் சில காட்சிகளை வெட்டி ஒட்டி டிரெய்லர் காட்டி இருந்தார். புத்தகமே மகாத்மா காந்தி கொலை வழக்கு பற்றியது தான் , அதனால் மகாத்மாவுக்கு இணையாக கோட்சேவும் புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கிறார் என்பது படித்ததில் தெரிகிறது.இவர் குறிப்பிட்டுள்ள குறிப்புகளிலே கோட்சே குறித்த முழு அறிமுகம் நமக்கு கிடைக்கிறது. (கோட்சேவின் பிறப்பு , குணநலன்கள் , அருள் வழங்கும் சக்தி , பல்வேறு தொழில் புரிந்து எதிலும் உருப்படாமல் , இந்துத்துவா கொள்கையில் இறங்கியது , காந்தியின் கொள்கைக்கு மாறாக திரும்பி , பின் அவரையே கொலைசெய்யத் துணிந்தது வரை அழகான குறிப்புகள். குறிப்புகளே இவ்வளவுவிஷயங்களையும் வியப்பையும் தருகிறதென்றால் புத்தகம் எவ்வளவு தகவல்களைக் கொண்டிருக்கும் என கற்பனை செய்துக் கொண்டிருந்தேன்.....) NATHURAM KOTCHE படித்துக்கொண்டிருக்கும் பொழுதே ஒரு குறிப்பிட்ட பாரா என்னை ஷாக்ஆக்கி பழைய நினைவுகளில் மூழ்கச்செய்தது. கோட்சே வின் ப...