Posts

Showing posts from 2023

நோ மீன்ஸ் நோ பாடிய அரபுக்கிளி..!

என்றோ போலீஸ் டிரைனிங் அகாடமியில், காம்பவுண்ட் சுவர் இல்லாத காலத்தில், மாடுகள் நுழைந்து அங்கு வளர்த்துவந்த செடிகளைத் துளிர்விட துளிர்விட பகலிரவுப் பார்க்காமல் தின்று வைக்க, அவை மேற்கொண்டு  மேய்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு பெயர் தெரியாத உயராதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் தினம் ஒரு காவல் அதிகாரி மாடுகளை விரட்ட காவலுக்கு நிற்க வைக்கப்பட, அந்தச் செடி மரமாகிவிட்ட இன்றும் ஒரு போலீஸ்காரர் இரவுகளில் மரத்தடியில் நின்றுகொண்டிருப்பார். ஏன் நிற்கிறார் என்று அவருக்குத் தற்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உயரதிகாரி நிற்கச்சொன்னார் அதனால் நிற்கிறார். இந்தக்காட்சி டாணாக்காரன் படத்தில் வரும். ஏன்? எதற்கு? என்றெல்லாம் அதிகாரிகளிடம் கேட்க முடியாது. அதிகாரி சொன்னால் கேட்க வேண்டும். அவ்வளவு தான். அரசு இயந்திரம் என்று சும்மாவா சொன்னார்கள். உயர் அதிகாரிகளின் கட்டளையே சாசணம். அதை எதிர்த்து பேசிய பட்டாபியின் நிலையையும் அந்தப் படத்தில் பார்த்தோம் அல்லவா! அதே போல் தான் எங்கும். அதிகாரி சொன்னால் பால் கசக்கும் என்று கூட  ஆமோதிப்பார்கள்.  கொரானா நேரத்தில் நாளொரு உத்தரவு, மணிக்கொரு மாற்றம் என விம...

அடிச்சித்தான் கேட்கணும்..!!

ஒரு சின்ன வேலையா அலுவலகத்தான்ஸ் நேற்று  இதுவரைக்கும் காலடிபடாத பாலைவனத்தோட ஒரு கடற்கரை நகருக்கு அனுப்பிவச்சானுங்க. பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சொன்னாலும் யாருக்கும் தெரியப்போறது இல்லை. விட்டுத்தள்ளுங்க, இது ஒரு பாலைவன ராம்நாடு.  பெரும்பாலும் பாலைவனத்துல இருக்குற ஒரே நல்ல விஷயம் ஐந்து நட்சத்திரக் குறியீடு ஹோட்டல் அளவு இல்லாட்டியும் இரண்டு நட்சத்திரக் குறி ஹோட்டல் அளவுக்காவது குவாலிட்டியா ரூமும், சோறும் கிடைக்கிறது தான். என்னடா இம்புட்டு குவாலிட்டியா தரானுங்களே இவனுங்களுக்குக் கட்டுபடியாகுமான்னு அங்க இங்க உருட்டிப்பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கம்பெனி நமக்கு பத்து ரூபா செலவு பண்ணா, நம்மளை வச்சி நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாரிப்பானுங்கன்றது. சரி சொந்தமா முதல் போட்டு கம்பெனி நடத்துறானுங்க பிழைத்துப்போகட்டும்ன்னு கண்டுக்காம இருக்கலாம் தான். ஆனால், இதுலயும் சில பேராசைப் பெருச்சாளிங்க இருக்கானுங்க. மருந்துக்கும் தொழிலாளிங்களைக் கண்டுக்காம அவசரகாலத்துல அரசாங்கம் ரெடி பண்ற கேம்ப் கணக்கா ரூமும், எங்கேயாவது வெள்ளம் வந்தா ஊறுகாய் பாக்கெட்டை உதவியா வழங்குற திடீர் வள்ளல் கணக்க...

சங்கிகளின் கதறல் ..!

சங்கிகள் என்றாலே கதறல் , கதறல் என்றாலே சங்கிகள் என்பது மாமாங்கமாய் பார்த்து வரும் ஒன்று தான்.இருப்பினும் இந்த சங்கிகளால் மட்டும் எப்படி ஓவ்வொரு முறையும் சீசனுக்கு சீசன் நாயின்  குரைச்சல் மாறுவது போல் மாற்றி மாற்றி கதறி அசரடிக்கமுடிகிறது என்பது ஓர் உலக வியப்பே! சமீபத்திய டவுசர்  ஒன்றின் பினாத்தல் தான் அசரடித்தது . பேச்சு  வாக்கில் டவுசரிடம்   தமிழகம் பெண்களுக்கு எப்போதும்  பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல்,தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஆண்களின் அணுகுமுறை மற்றும் வளர்ப்புமுறையே காரணம் என்று சொல்லித்தொலைத்தாலும் தொலைத்தேன் . வெகுண்டெழுந்து விட்டார் திரு சங்கியார் அவர்கள். தமிழக ஆண்கள்  எல்லாம் சுய புத்தி இல்லாமல்  பெண்கள் பேச்சை கேட்டு நடப்பவர்களாம். பெண்களுக்கு தாமதமாய் திருமணம் நடத்தி வைப்பவர்களாம். குடும்பத்தின் அத்தனை முடிவுகளையும் பெண்களே  எடுக்கிறார்களாம் . தமிழக  ஆண்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டே செயல்படுகிறார்களாம் .  நாடாளுமன்ற தேர்தலில்  மோடி எனும் ஆணை தோற்கடித்து...

ஓமானிலும் விக்ரவாண்டி உணவகங்கள்..!!

பேருந்து பயணத்தில் பெரும் அசெளகரியத்தைத் தருபவர் மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதலாமவரான உணவார் அவர்கள். நெடுந்தூரப்பயணங்களில் இவர் கொடுக்கும் இடைஞ்சல் சொல்லி மாளாது. டைமுக்கு சாப்பிட்டு பழகுன நமக்கு பேட் டைம் உருவாக்குபவர். ஊருக்குப்போறோம்ன்னு தெரிஞ்சாலே கடை சாப்பாடு ஒத்துக்காது ராசான்னு இந்தத் தாய்க்குலங்கள் எலுமிச்சையை கசக்கி, சாறெடுத்து, கடலை பருப்பை வறுத்து, கொஞ்சம் நல்லெண்ணெய் சூடு பண்ணி,கடுகைப்போட்டு வெடி வெடிச்சு விளையாடி, கருவேப்பிலையை சேர்த்து வதக்கி, பிழிஞ்ச எலுமிச்சை சாறை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கொஞ்சம் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சைவாசம் போய் எலுமிச்சை ரசத்துக்கான யுனிவர்சல் வாசம் வந்ததும், சோற்றைக்கொட்டிக் கிண்டோகிண்டுன்னுகிண்டி பொங்கலாக்கி  பொட்டலம் கட்டி தந்தாலும், அதைத் தூக்கிட்டுப்போய் நிம்மதியா ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிட வாய்க்காது. ரன்னிங்ல பொட்டலத்தை அவுத்தா மொத்த பஸ்சும் நம்மளை கட்டுச்சோற்றை அவுத்துட்டான்டா காட்டாண்டின்னு கண்ணாலயே கற்பழிப்பானுங்க. அந்த "ச்சீசீப்" பார்வையைத் தவிர்க்கவே பயணங்களில் பொட்டலத்தைத்தூக்கும் பொட்டலத்தலைம...

எதை செஞ்சாலும் இந்த உலகம் நம்மள உத்துப்பார்க்கணும்...!!

பலநேரங்களில் நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் வடிவேலுவின் அத்தனை கதாபாத்திரங்களும் அச்சு அசலாக நம் ஜி யால் நகலெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. வடிவேலு அவர்கள் நினைத்தால் ஜி மீது வழக்குப்போடலாம். நஷ்ட ஈடு கேட்கலாம்.  வின்னர் படத்தில் வடிவேலு நடத்திய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கரமான வெர்சன் தான் நம் ஜி யின் பாஜக. கூட்டிக்கழித்தெல்லாம் பார்க்க வேண்டாம்,நேராக பார்த்தாலே அப்படித்தான் இருக்கிறது. வடிவேலு சொல்லும் வசனம் தான்,"நாம என்ன செஞ்சாலும் இந்த உலகம் நம்மள உத்துப்பார்க்கணும்". இதை ஆதர்சமாகக்கொண்டே ஜி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும்    தன்னை விளம்பரப்படுத்திக்க தவறியதேயில்லை. சாதனை என்று ஓயாமல் ஜோக்குகளை உதிர்ப்பதில் வல்லவர். உலகமே காறித்துப்பும் ஒரு விஷயத்தை அவரும்,அவர் சகாக்களும் சாதனையாகப்பார்ப்பது கண்கூடு.  பாபர் மசூதியை இடித்து பல ஆயரக்கணக்கானோரை கொன்று,நீதி கேட்டவர்களை மிரட்டி,ஒடுக்கி ஒருவழியாக "பூஜா கராணாகே" எனஅவர் அப்பரசிண்டிகளின் கோரிக்கையை ஒரு வாராக தன் ராஜபாராக்கிரம உத்திகளைப்பயன்படுத்தி நிறைவேற்றிக்காட்டியிருக்கிறார். அறிவிருப்போர...

மோதி ஜி யின் புதிய இந்திய சுதந்திர வரலாறு?

வரலாற்றில் ரொம்பவே வீக்கான நம் ஜி நேற்று சொல்லிய ஒன்று இன்றும் என்னைப்பிராண்டிக் கொண்டுள்ளது.  ராமருக்கு கோவில் கட்டுவதை, அதற்காக நடந்த,நடத்திய திட்டமிட்ட வன்முறைகளை இந்திய சுதந்திரப்போராட்டத்தோடு ஒப்பிட்டு ஒரு குண்டு செலவில்லாமல் தேசத்துக்காக உயிர் விட்ட தியாகிகளை கருணையே இல்லாமல் சுட்டுத்தள்ளியிருக்கிறார் நம் ஜி. இதுவரை யாரும் அவரை இந்த ஒப்பீட்டுக்காக கண்டித்தது போல் தெரியவில்லை. சுதந்திர போராட்ட வீர வரலாற்றை, சில ஆயிரம் மத வெறி பிடித்த வாணரங்கள் செய்த வன்முறையோடு ஓப்பிடுவது எந்த வகையில் நியாயம்? ஒரு வேளை ஜி யின் புதிய இந்தியாவில் நியாய தர்மங்களும் மாறிவிட்டிருக்கும் போல.  சாதி,மத,மொழி,இன வேறுபாடு கடந்து நடந்த சுதந்திர போர் எங்கே?  வன்முறை,கலவரம்,மதவெறி,சாதிவெறி,மொழிவெறி என இருக்கும் அத்தனை கெட்ட விஷயங்களின் துணையோடு இவர்கள் செய்திருக்கும் ராம ராஜ்ஜிய அக்கப்போர் எங்கே?  ஏணி அல்ல ஏழுகடல் அளவு வைத்தாலும் எட்டாது.  நாட்டின் தேசந்தந்தை, உண்மையான ஒருமைப்பாட்டின் அடையாளம் காந்தியாரை அன்று அவர் சார்ந்த போட்டுத்தள்ளியது பத்தாது என இன்று ராமர் கோவிலை ஒற்றுமையின் அடையாள...

பெண்கள் தலைமையில்...!!

பெண்களின் செளகிதாராக தன்னைக்காட்டிக்கொள்வதில் பொதுவாகவே ஆண் வர்க்கத்துக்கு ஒரு தனி ஈடுபாடு உண்டு. அதிலும் நம் 56 இன்ச் செளகிதார் எல்லோரையும் அடித்து நொறுக்கி முன்னணியில் இருக்கிறார்.  மைக் பிடித்துவிட்டால் "பெண்கள் நம் நாட்டின் கண்கள், பாரதத்தின் சக்திகள், சுடிதார் போட்ட பாரத் மாதாக்கள், ஜீன்ஸ் அணிந்த ஜான்சி ராணிக்கள், அவர்களின் சக்திக்கு அகிலத்தில் ஈடில்லை" என்பது போன்றெல்லாம் சிலிர்க்க வைக்கத் தவறியதே இல்லை நம் ஜி.  "சாதாரணமான பெண்கள் வளர்ச்சி என்பதிலிருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்" என நம் ஜி சொல்லியிருக்கிறார். எதை வைத்துச் சொல்கிறார் என்று தெரியவில்லை. பெண்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வராமலே எப்படி அவர்கள் தலைமையில் நாடு முன்னேற முடியும் என்பது தெரியவில்லை.  சாதாரணமாக பெண்கள் இணையத்தில் பாஜகவுக்கு எதிராகவோ இல்லை மாற்று அரசியலோ பேசிவிட்டால் தாங்கிக்கொள்ள முடியாத சங்பரிவாரக்கூட்டம், அது சார்ந்த இயக்கங்கள் முதலில் திருந்தட்டும். வசைபாடுவதை நிறுத்தட்டும். சொற்களால் கற்பழிப்பதை நிறுத்தட்டும்.  ஜி அவர்களை முதலில்  திருத்தட...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!

2019 ஆம் ஆண்டு முடிவில் எழுதியது : கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும்  உருப்படியாக கழட்டியதாய் பெரிதாக எதுவும் ஞாபகமில்லை. சிறிது வாசித்திருக்கிறேன். ஒரு படிப்பு பாதியில் கிடக்கிறது. ஆண்டு இறுதியில் எடுத்த உடற்பயிற்சி சபதம் மட்டும் நூறு நாட்களை நெறுங்கிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் வட்டம் மிகவும் சுருங்கிவிட்டது. வாட்சாப்பில் ஒரு நெருங்கிய நட்பு வட்டம் என்ற ஒரு பிராட்காஸ்டை உருவாக்கினேன்...அடிக்கடி தொடர்பில் இருப்பவர்கள்... தூரம் கூடிய பின்னும் மறக்காமல் இருப்பவர்கள்... என வடிகட்டியதில் தேறியது வெறும் 12பேர் மட்டுமே ... ஆச்சரியப்பட்டுவிட்டேன்.... ஆயிரத்துக்கு மேல் முகநூல் நண்பர்கள் இருந்தும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை.... மூவர் டவுசர் போடாத காலத்திலிருந்தே நண்பர்கள்.... நால்வர் கல்லூரி தோழியர்... ஒருவர் பணி நிமித்தமாய் கிடைத்த உறவு... முகநூல் பழக்கத்தால் கிடைத்த நண்பர் ஒருவர்....பள்ளி கால ஆசிரியர் ஒருவர்... பணிச்சூழலில் சிக்குண்டு தவித்த சமயத்தில் கைகொடுத்த ஒருவர்.... (இதில் என் பிறந்தநாளை நினைவு வைத்து வாழ்த்தியவர்கள் வெறும்  ஆறு பேர் மட்டுமே..அவர்களுக்கு கூடுதலான அன்பும் ...

நிலையாமை...!!

சைவ இலக்கியங்கள் யாவும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என அப்பட்டமாக எடுத்துக்காட்டுபவை. எதுவுமே இந்த உலகில் நிரந்தரம் இல்லை என்பதே அவற்றின் அடிநாதம். வாழ்வில் நிலையாமை  ஒன்றே நிரந்தரம் என்பதை  சைவ இலக்கியங்களைப் படித்த ஒருவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.  பணம்,பொன்,பெண்,பொருள் என்ற மாயைகளில் இருந்து எளிதாக வெளிவர முடியும். ஆனால், இன்று சைவத்தைப் போதிக்கும் கஞ்சா புகழ் சாமியார்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என இயற்கைக்கு எதிராய் வடை சுட்டு விற்றுக்கொண்டுள்ளார்கள்.  நிலையாமை என்பதை போதிப்பதே பக்தி.ஆனால், இங்கு கடவுளை முன்னிறுத்தி கலவரம்,வன்முறை,பாகுபாடு,நில அபகரிப்பு என சகலத்தையும் பக்தர்கள் முன்னின்று நடத்திக்கொண்டுள்ளார்கள்.  இவ்வுலகத்தில் இருப்பவை எல்லாம் நிலையானது, நம்மிடம் இருக்கும் செல்வம்,சொத்து எல்லாம் எப்பொழுதும் நம்மிடமே இருக்கும் என்கிற நினைப்புத்தான் ஆணவத்திற்கு வழிவகுக்கும். மானுடப்பதர்களாகிய நம்முடைய அந்த ஆணவத்திற்கு கசையடி கொடுக்கத்தான் இலக்கியங்கள் நிலையாமையை முக்கியக் கருப்பொருளாகப்பேசின.  ஆனால், இன்று அதையெல்லாம் கேட்பாரில்லை. என்ன சொல்கிற...

சப்டைட்டில்...!!!

இடம் அறிந்து பொருள் கொள்க போலவே, தேவை அறிந்து சப்டைட்டில் போடுக..!!என கூவ வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம், முழுக்க முழுக்க தமிழர்களால் பார்க்கப்படும் படத்திற்கு இங்கே ஓமானில் அரபி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சப்டைட்டில். பெண்களின் அழகிய சிறுத்த இடையை மறைக்கும் கைப்பை போல அரைத்திரையை மறைத்தவாறு வந்து தொலைக்கிறது சப்டைட்டில். அதிலும் பெரிது பெரிதான எழுத்துருக்களில். படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியவில்லை.குறிப்பாக தமிழ் வசனத்தை அப்படியே கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு மொழி பெயர்த்திருப்பார்கள் போல. கண்றாவியான, தவறான மொழிபெயர்ப்பு. மேலே 500 கோடி என்று பேசிக்கொண்டிருந்தால் கீழே 9500 கோடி என தவறாக சப்டைட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் படத்தை பிற மொழிக்காரர்கள் பார்க்க வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஆங்கில சப்டைட்டில் மட்டும் போதுமே. அரபி வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. பிற மொழித் திரைப்படம் பார்க்க விரும்பும் அரபிக்களில் பெரும்பாலானவர்கள் போதுமான ஆங்கில அடிப்படைத் தெரிந்தவர்கள் தான். எதற்காக இரண்டு சப்டைட்டில் திரையை அடைத்துக்கொண்டு வர வேண்டும். அதுவும் நல்லிரவு ...

தனி ஒருவன்

கூட்டத்துலயே வாழ்ந்து, கூட்டத்துலயே தவழ்ந்து, கூட்டத்துலயே மிதந்த ஒருத்தன் தனி ஒருத்தனா ஃபீல் பண்றதெல்லாம் கடல் வற்றினால் நடக்குற மாதிரி அதிசயம் தான். ஆனால், வாழ்க்கை இன்ட்ரோவெர்ட்ட எக்ஸ்ட்ரோவெர்ட்டாவும், எக்ஸ்ட்ரோவெர்ட்ட இன்ட்ரோவெர்ட்டாவும் மாத்துறதுக்கு லிட்டில் பிரின்சஸ் சமைக்குறதுக்கு மெனக்கெடுற மாதிரி கூட மெனக்கெட  தேவையில்லை. இயல்பா அது பாட்டுக்கு சம்பவம் செஞ்சிட்டு வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு விசய்ண்ணா வசனத்தை பேசாமப்பேசிட்டு போய்ட்டே இருக்கும். நானும் மதுரைக்காரன் தான்டா மாதிரி, நானும் பெரிய சம்பவக்காரன் தான்டான்னு காலம் மட்டும் தான் சட்டை காலரை தூக்கிவிட்டுக்க முடியும். காலேஜ் வரைக்கும் வாயைத்தொறந்தாலே கவுண்ட்டர் அடிச்சு அழிச்சாட்டியம் பண்ண என்னையைப்போய் அண்ணே, சாம்பார் இன்னும் கொஞ்சம் வேணும்ன்னு கேட்கக்கூட கூச்சப்பட வச்சிடுச்சு. மாசம் ஒரு புது இடம்ன்னு டைம்டேபிள் போட்டு காசே இல்லாத காலத்துலயும் முருக பெருமான் மயிலேறி உலகத்தைச் சுற்றி வந்த மாதிரி சுற்றிக்கிட்டு இருந்த என்னை, இப்ப என்னடான்னா? லீவ்னா கூட வீட்டை விட்டு போகவேண்டாம்ன்னு இழுத்து போர்த்திக்கிட்டு தூங்க வச்ச மேஜிக் எ...