கிறுக்கல்ஸ்...-1`



உனக்கும்  மழைக்கும் என்னடி உறவு....???
என் காதுகளில் விழும் மழைச்சத்தம்
உன் பெயராகவே கேட்கிறது....!!!!!!!

*****
அணில் கொறிக்கும் வரை 
பல
கனிகள்
நம் கண்களுக்கு
தட்டுப்படுவதே இல்லை........
#நம் பிரிவைப் போல வலிகள்


*******
நிஜங்கள்
 நிழலாய்
பின்
தொடர்ந்தாலும் ,
பொய்களால்
பொழுதாகிப்போகிறாள்
அவள்...!!!
நீ தான் !!!!!!

****
முரண்:
குயவனை
விட
சிற்பிக்கு
கொடுக்கப்படும்
அதிகபட்ச
ஊதியம்....!!!!

*****

 


என்
எல்லா
ஏக்கங்களும்
இதழோரப்புன்னகையால்
மறைக்கப்படுகின்றன....!!!!
மறக்கவும் படுகின்றன ...!!!!!


****

Comments

Popular posts from this blog

பைத்தியக்கார உலகமடா.....

2023−ல் என்ன கழட்டினேன் மற்றும் 2024-ல் என்ன கழட்டப்போகிறேன்!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......